காவல்துறையின் செயல்பாடு மந்த கதியில் இருக்கிறது-நடிகை விஜயலக்ஷ்மி.

by Editor / 16-09-2023 08:46:14am
 காவல்துறையின் செயல்பாடு மந்த கதியில் இருக்கிறது-நடிகை விஜயலக்ஷ்மி.

சீமான் மீதான பாலியல் புகாரை நடிகை விஜயலட்சுமி தற்போது திரும்ப பெற்றுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. காவல்துறையின் செயல்பாடு மந்த கதியில் இருக்கிறது என்றும் கூறிய 
நடிகை விஜயலக்ஷ்மி. மேலும் கூறும்போது "அரசியல் பலம், ஆள் பலம் இருக்கும் சீமானுக்கு எதிரான என் போராட்டத்திற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அவரை எதிர்க்க தமிழ்நாட்டில் ஒரு ஆள் கூட இல்லை" எனக் கூறி பாலியல் புகாரை திரும்ப பெற்றுள்ளார். இதனால், பாலியல் புகாரில் விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து சீமானுக்கு விலக்கு தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : சீமான்-நடிகை விஜயலக்ஷ்மி.

Share via