கோழிக்கோட்டில் பள்ளிகள், கல்லூரிகள் மூடல்

by Staff / 17-09-2023 12:41:01pm
கோழிக்கோட்டில் பள்ளிகள், கல்லூரிகள் மூடல்

நிஃபா வைரஸ் எதிரொலியாக கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பள்ளிகள், கல்லூரிகள் கால வரையின்றி மூடப்பட்டுள்ளன. இரு தினங்களுக்கு முன் கோழிக்கோடு பகுதியில் நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்த இருவருடனும் தொடர்பில் இருந்த 1,080 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது வரை 6 பேர் நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.அதனைத் தொடர்ந்து அங்கு நோய்த் தடுப்பு பணிகளை கேரள மாநில சுகாதாரத் துறையினர் முடக்கி விட்டுள்ளனர். இதனை அடுத்து இதுவரை 94 பேரிடம் உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

 

Tags :

Share via