உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குக்கு இனி அரசு மரியாதை

by Staff / 23-09-2023 12:30:05pm
உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குக்கு இனி அரசு மரியாதை

உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்வீட் செய்துள்ள அவர், குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

 

Tags :

Share via