அண்ணாநகர் பகுதியில் வாலிபரை கத்தியால் தாக்கிய 3 பேர் கைது
சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய்குமார்(25),
என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் காதலித்த பெண் விலகி சென்றதால், அப்பெண்ணின் தோழி அபிநயா என்பவரிடம் பேசுவதற்காக கடந்த 8ம் தேதி இரவு, அண்ணா நகர், நியூ ஆவடி ரோடு, RTO அலுவலகம் அருகில் சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த அபிநயா, அவரது கணவர் மோசஸ் மற்றும் சாமுவேல் ஆகிய மூவரும் சேர்ந்து சஞ்சய்குமாரை, கத்தியால் தாக்கி மிரட்டல் விடுத்து தப்பிச் சென் றனர்.இதில் காயமடைந்த சஞ்சய்குமார், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மோசஸ்(23) அவரது மனைவி அபிநயா(21) சாமுவேல்(19) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.
Tags :