12ஆம் வகுப்பு மாணவன் குத்தி படுகொலை
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 12வது வகுப்பு மாணவன் ஜீவா முன்விரோதத்தால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட மாணவனின் உடல் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மாணவனை 8 இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர். ஓரினச் சேர்க்கைக்கு மறுத்ததால் இந்த கொலை நடத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :