வில்வித்தை போட்டி - காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆண்கள் அணி
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று காலை ஆண்களுக்கான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், தருண் தீப்ராய் ஆகியோர் கஜகஸ்தான் அணியிருடன் மோதினர்.
இதில் முதல் 2 செட்டை இந்திய அணி வென்றது, மூன்றாவது செட்டை கஜகஸ்தான் வென்றது. நான்காவது மற்றும் கடைசி செட்டை இந்திய அணி கைப்பற்றியது. இதன்மூலம் இந்திய அணி 6- 2 என்ற கணக்கில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
Tags :