மும்பையில் பயங்கர தீ விபத்து
மும்பையின் கோரேகானில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் 7 மாடி கட்டிடம் ஒன்றிர் திடீரென தீ பரவியது. இதனால் 7 பேர் உயிருடன் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்தவர்களில் 12 ஆண்களும் 28 பெண்களும் அடங்குவர். விபத்துக்கு மின் கசிவு ஏற்பட்டதே காரணம் என போலீசார் முதற்கட்ட விசாரணை மூலம் தெரிவித்துள்ளனர்.
Tags :