ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

by Staff / 09-10-2023 12:04:57pm
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கவில்லை என புகாரளித்துள்ளனர். இந்நிலையில், ஆர்.எஸ்.மங்கலம், பாண்டுகுடி, சேந்தனேந்தல் உள்ளிட்ட கிராமத்தில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தடுக்க முயன்றதால் போலீசார் - விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories