அரியலூர் பட்டாசு விபத்து - பலி 10ஆக உயர்வு

by Staff / 09-10-2023 01:35:55pm
அரியலூர் பட்டாசு விபத்து - பலி 10ஆக உயர்வு

அரியலூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. 3 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். வெற்றியூர் கிராமத்தில் நாட்டுப் பட்டாசுகளை தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் தீ விபத்து காரணமாக பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டாசு ஆலை உரிமையாளர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் அவரது மருமகனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். வெடி விபத்தில் 9 பைக்குகள், ஒரு டெம்போ வேன் உள்ளிட்ட வாகனங்களும் எரிந்து சேதமானது.

 

Tags :

Share via