கடையில் வேலை செய்து வந்த சிறுமியை கடத்திய வாலிபர் கைது

by Staff / 10-10-2023 01:00:02pm
கடையில் வேலை செய்து வந்த சிறுமியை கடத்திய வாலிபர் கைது

 சேலம் புதிய பஸ் நிலையத்தில் 17 வயது சிறுமி ஒரு கடையில் வேலை செய்து வந்தார், கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் இரவு வீடு திரும்ப வில்லை. இது குறித்து அவருடைய பெற்றோர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது, கொண்டலாம்பட்டி போயர் தெருவை சேர்ந்த வீரமணி (29) என்பவர் கடத்தி சென்று இருப்பது தெரிய வந்ததை அடுத்து  போலீசார் வழக்குப் ப திவு செய்து வீரமணிையை கைது செய்தனர்.

 

Tags :

Share via