ஆட்டோ டிரைவர் வீடு புகுந்து வெட்டிக்கொலை.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் மேக்ஸ்வெல்(50). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று மாலை தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மூன்று பேர் மேக்ஸ்வெல்லை வெட்டிவிட்டு தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :