மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடத்திய வாலிபர் கைது

by Staff / 14-10-2023 04:32:45pm
மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடத்திய வாலிபர் கைது

திருப்பூர் குமரன் ரோட்டில் ஓட்டல் அறையில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த சென்டரில் விபச்சாரம் நடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உதவி போலீஸ் கமிஷனர் அனில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரில் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அந்த மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கிருந்து மும்பையைச் சேர்ந்த 30 வயது பெண், திருப்பூர் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகியோரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மசாஜ் சென்டர் நடத்தி வந்த மோகன் (30) என்பவரை கைது செய்தனர்.

 

Tags :

Share via