டெல்லியில் நிலநடுக்கம்
தலைநகர் டெல்லி என்சிஆர் பகுதியில் இன்று (அக்டோபர் 15 ஆம் தேதி) நண்பகலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் அரியானாவின் பரிதாபாத்தில் இருந்து 13 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இதே போல அக்டோபர் 3 ஆம் தேதியும் இதேபோன்ற நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :