லிப்டில் சிக்கியபெண் மீட்பு

by Staff / 26-09-2022 01:28:01pm
லிப்டில் சிக்கியபெண் மீட்பு

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், அவரச சிகிச்சை பிரிவு கட்டடத்தில் 'லிப்ட்' இயங்குகிறது. இதில், நோயாளிகள் மற்றும் துாய்மை பணியாளர்கள் சென்று வருவது வழக்கம்.
செங்கல்பட்டு அடுத்த, உதயம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த, துாய்மை பணியாளர் ஜானகி, 45, நேற்று முன்தினம், மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டார். அவர், லிப்டில் இரண்டாவது தளத்திற்கு சென்றார். ஆனால், கதவு திறக்காததால் பயத்தில் மயங்கி விழுந்தார். லிப்ட் இயங்காமல் இருந்ததை பார்த்த ஊழியர்கள், இரும்பு கம்பியால் உடைத்து, ஒரு மணி நேரம் போராடி, ஜானகியை மீட்டனர்.அவர் நலமுடன் உள்ளார். இச்சம்பவம், நோயாளிகள் மற்றும் சக ஊழியர்கள் மத்தியல் பீதி ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, லிப்ட் செயல்படவில்லை என, மருத்துமனை நிர்வாகத்தினர் கூறினர்.
 

 

Tags :

Share via