ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்கள் பலி

by Staff / 22-10-2023 02:30:15pm
ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்கள் பலி

ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரு பெண்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியை சேர்ந்த வசந்தா மற்றும் சாவித்ரி இருவரும் ரயில் தண்டவாளத்தை அலட்சியமாக கடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த அதிவிரைவு ரயில் மோதியதில் இருவரும் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

Tags :

Share via