பா.ஜ.க தலைவராக வேண்டும் என்ற ஆசையில் ஆளுநர் பொய் பேசுகிறார் - டி. ஆர். பாலு

by Staff / 24-10-2023 03:45:07pm
 பா.ஜ.க தலைவராக வேண்டும் என்ற ஆசையில் ஆளுநர் பொய் பேசுகிறார் - டி. ஆர். பாலு

தமிழகத்தின் பாஜக தலைவராக வேண்டும் என்ற ஆசையில் ஆளுநரும் பொய் பேசுகிறார் .திமுக எம்.பி, டி. ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,..

. தமிழக மக்களின் வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைந்த தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்குச் சட்டமுன்வடிவு உள்ளிட்ட பல மசோதாக்கள் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது. அந்தச் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர் ஆர். என். ரவி, தன் பொறுப்பை நிறைவேற்றாமல், மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராகச் சுற்றி, நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் பேசி வருவது அரசியல் சாசனத்துக்கு அவர் செய்கின்ற துரோகம்

. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்தவர்கள் யார், குடிஅரசு ஏட்டில் ‘இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்’ எனத் தலையங்கம் எழுதிச் சிறை சென்றவர்கள் யார் என்பதும் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் புரியும். அதுவரை ஆளுநர் மாளிகையே… அடக்கிடு வாயை..

.தமிழக மக்களின் வரிப்பணத்தில் சுகம் அனுபவித்துக் கொண்டு, தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை கைவிட்டு, திருக்குறளுக்கு ஏற்ப நடக்க வேண்டும். இல்லையென்றால் ஆளுநர் பதவியை விட்டு விலகி அரசியல்வாதியாக, ஏன்? பா. ஜ.கவின் தலைவராகவோ, ஆர்எஸ்எஸ்-ன் தலைவராக ஆகட்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via