நடனம் ஆடும்போது மாரடைப்பால் இளைஞர் பலி
உத்திரப் பிரதேசத்தில் உள்ள அம்பேத்கர் நகர் மாவட்டம் லோர்பூர் தாஜன் கிராமத்தில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. முலாயம் ராஜ்பார் (34) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சுருண்டு விழுந்து கீழே விழுந்தார். உடனே அங்கிருந்த சிலர் கீழே விழுந்த இளைஞனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :