சேலம்-கோவை அரசு பேருந்தில் தீ விபத்து.. பயணிகள் அலறியடித்து ஓட்டம்
சேலத்தில் இருந்து கோவை நோக்கி இன்று மதியம் 1:30க்கு ஒரு அரசு பேருந்து புறப்பட்டு சென்றுள்ளது பேருந்தில் 67 பயணிகள் பயணித்ததாகவும் கூறப்படுகிறது.மாலை 4 மணியளவில் கருமத்தம்பட்டி அருகே திடீரென பேருந்து முன் பக்கத்தில் புகை கிளம்பியுள்ளது இதன் காரணமாக ஓட்டுனர் சிவகுமார் மற்றும் நடத்துனர் ராஜா ஆகியோர் சாலை ஓரத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்பொழுது திடீரென பேருந்தில் தீப்பிடித்து மள..மள..வென எரிய தொடங்கியது. இதனை அடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓட்டம்பிடித்தனர்.இதனிடையே பேருந்து மேலும் கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. இதனை தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த சூலூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அரசு பேருந்து தீப்பிடித்து எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags : சேலம்-கோவை அரசு பேருந்தில் தீ விபத்து.. பயணிகள் அலறியடித்து ஓட்டம்