காட்பாடி ரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல் -  ஜார்கண்ட் மாநில வாலிபர் கைது.

by Editor / 30-01-2024 09:20:37am
காட்பாடி ரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல் -  ஜார்கண்ட் மாநில வாலிபர் கைது.

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பவர்கள், பயன்படுத்துபவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் அடிப்படையில்  வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர்  மணிகண்டன் ஆகியோர்களின் தலைமையிலான போலீசார் காட்பாடி இரயில் நிலையம் அருகே நடத்திய சோதனையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த  ஜனும்சிங் கோப் (34)  என்பவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக கடத்தி கொண்டு வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டபோது 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் சுமார் 1,10,000/- ரூபாய் மதிப்புடைய 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவர் மீது கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜனும்சிங் கோப் என்பவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

 

Tags : காட்பாடி ரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல் -  ஜார்கண்ட் மாநில வாலிபர் கைது.

Share via