கடன் தொல்லையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

by Staff / 10-02-2023 01:19:53pm
கடன் தொல்லையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

புதுக்கடை அருகே குன்னத்தூர் பகுதி சாத்திரவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் பொன்னுமணி மகன் குமரேசன்(51). இவருக்கு ஜெயக்குமாரி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். தொழிலாளியான குமரசேனுக்கு மதுப் பழக்கம் உண்டு. இந்த நிலையில் வீடு கட்டுவதற்காக வங்கியில்  இருந்து கடன் வாங்கி , கடன் சுமையால் அவதிப்பட்டுள்ளார். வங்கியில் தவணை செலுத்த முடியாததால் குமரேசன் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற குமரேசன் அதே பகுதி பொற்றை என்ற இடத்தில் விஷப்பொடி தின்று இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் கண்டு உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via