அனல் மின் நிலையத்தில் பயங்கர தீவிபத்து
தெலங்கானா மாநில மின் உற்பத்திக் கழகத்தின் (TSGENCO) பெடப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ராமகுண்டம் அனல் மின் நிலையத்தில் புதன்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொதிகலனில் இருந்து செல்லும் கேபிளில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக இது நடந்ததாக கூறப்படுகிறது.
Tags :