15 கடைகள் தீயில் எரிந்து நாசம்

by Staff / 28-10-2023 02:18:31pm
15 கடைகள் தீயில் எரிந்து நாசம்

இமாச்சல பிரதேச மாநிலம் குலுவில் இன்று  பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தசரா பண்டிகையையொட்டி தால்பூர் மைதானத்தில் 15 கடைகள், கூடாரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நள்ளிரவில் ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுத்தடுத்த கடைகள் மற்றும் கூடாரங்களுக்கும் பரவியது. இந்த விபத்தில் 15 கடைகள் முழுமையான எரிந்து நாசமாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விபத்து குறித்த முழு விவரம் இன்னும் தெரியவில்லை.

 

Tags :

Share via