இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் - 4 பேர் கைது

by Staff / 28-10-2023 02:14:27pm
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் - 4 பேர் கைது

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் மதுபோதையில் வந்து, கற்கள், மதுபாட்டில் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இது தொடர்பாக 6 நபர்களை பிடித்து மாம்பலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via