சனாதனத்தின் சில கொள்கைகளை எதிர்க்கிறோம் அமைச்சர் சேகர் பாபு
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டுமெனவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதியை கண்டித்தும் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவினர் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “ஒட்டுமொத்த சனாதனத்தையும் எதிர்க்கவில்லை, சனாதனத்தின் சில கொள்கைகளைத்தான் எதிர்க்கிறோம். என் மண் என் மக்கள் பயணம் தோல்வி அடைந்ததால் அண்ணாமலை குழம்பிபோயுள்ளார்” என தெரிவித்துள்ளார்.
Tags :