மத்திய அமைச்சர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு

by Staff / 31-10-2023 12:16:44pm
மத்திய அமைச்சர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு

கேரளாவின் எர்ணாகுளம் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக கேரள காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரளா தீவிரவாத சக்திகளை பொறுத்துக்கொள்கிறது என்று அமைச்சர் கூறியிருந்தார்.

 

Tags :

Share via