சாசனத்தை பாஜக புரட்டிப் போட்டது - கபில் சிபல்

by Staff / 01-11-2023 04:56:37pm
சாசனத்தை பாஜக புரட்டிப் போட்டது - கபில் சிபல்

தவறு செய்பவர்களை தன் பக்கம் வைத்துள்ள மத்திய பாஜக அரசு, எதிர்க்கட்சியினரை தொடர்ந்து விமர்சிப்பது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக செய்துவரும் செயல்கள் அனைத்தும் அரசியலமைப்புக்கு முரணானவை. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஜெயிலில் அடைத்தார்கள். மேற்கு வங்காளத்தில் அபிஷேக் பானர்ஜி டார்கெட் செய்யப்பட்டுள்ளதாக கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அரசியல் சாசனத்தின் ஒவ்வொரு விதியையும் பாஜக அரசு புரட்டிப் போட்டுவிட்டதாகவும், இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via