ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை.

by Editor / 03-11-2023 10:00:33pm
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள மருதபுரம் கிராமத்தில் சொத்து தகராறு காரணமாக அருமை கனி, அவருடைய மனைவி ராஜாத்தி மற்றும் அவரது மகன் காமராஜ் ஆகியோர் இணைந்து அருமைக்கனியினுடைய சகோதரர் சமுத்திரக்கனி மகன் திருமலை குமார் என்பவரை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலை குமாரின் தாய் மாரியம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அனுராதா குற்றவாளிகள் அருமைக்கனி,அவரது மனைவி ராஜாத்தி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும்,மகன் காமராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும்,கூடுதலாக மூன்று வருட சிறை தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் கூடுதல் மாவட்ட அரசு குற்றத்துறை வழக்கறிஞர் வேலுச்சாமி  ஆஜர் ஆனார்.

 

Tags : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை.

Share via

More stories