மனிதாபிமானத்தோடு மாணவியின் கல்விக்கு உதவிய ஆய்வாளர் .
குற்றாலம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தனியார் கல்லூரியில் தனது இரண்டாம் ஆண்டு (பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி) கல்வியை தேர்வுக்கு பணம் கட்ட முடியாமல் கல்வியை தொடர முடியாமல் . தென்காசி ஆய்வாளர் கே.எஸ். பாலமுருகன் அவர்களிடம் பணம் உதவி கேட்டு வந்துள்ளார். அவரது குடும்ப வருமை காரணமாக தென்காசி காவல் ஆய்வாளர் இரண்டாம் ஆண்டு தேர்வுக்கட்டண தொகையான ரூபாய் 10 ஆயிரத்தை மாணவியிடம் உடனடியாக வழங்கி உதவி செய்துள்ளார்,மேலும் வேலையில்லாமல் இருந்த அவருடைய அண்ணன் பட்டதாரியான செல்வ கணேஷ் தென்காசியில் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து கொடுத்து அந்த குடும்ப கஷ்டத்தை போக்கியுள்ளார். ஆய்வாளர் பாலமுருகனின் இந்த மனிதாபிமானமிக்க செயல் மக்கள்மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Tags : மனிதாபிமானத்தோடு மாணவியின் கல்விக்கு உதவிய ஆய்வாளர் .