இந்தியா வரும் ஆர்.கே.சுரேஷ்
ஆருத்ரா மோசடி வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகரும், பாஜக நிர்வாகியுமான நடிகர் ஆர்.கே.சுரேஷ் வரும் 10-ம் தேதி இந்தியா வர உள்ளதாக அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 'லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்'. இதனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்த வழக்கில் நேற்று விசாரணை நடைபெற்றது. இதில் ஆர்.கே.சுரேஷ் இந்தியா வர உள்ளதாக கூறியதையடுத்து வழக்கு 8-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags :