எஸ் எஸ் எல் சி தேர்வில் எட்டு நபர்கள் மட்டுமே தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

by Staff / 11-05-2024 04:27:43pm
எஸ் எஸ் எல் சி தேர்வில் எட்டு நபர்கள் மட்டுமே தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் பத்தாம் தேதி வெளியான இந்த தேர்வில் எட்டு லட்சத்து 56 ஆயிரத்து 181 மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்றுள்ளனர் இந்த நிலையில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு 20691 மாணவ மாணவிகளும் அறிவியலில் 5104 மாணவ மாணவிகளும் சமூக அறிவியலில் 4428 பேரும் ஆங்கிலத்தில் 415 நபர்களும் தாய் மொழியாம் தமிழ் மொழியில் எட்டு நபர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் ஒரு லட்சத்து ஐயாயிரம் பேருக்கு ஒரு நபர் மட்டுமே தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் மதிப்பெண் பெற்றது தமிழக மக்கள் மத்தியிலும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தமிழ் தமிழ் என்று தமிழுக்காக குரல் ஒலிக்கும் தமிழகத்தில் மொழிபாடத்திலேயே 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் எட்டு பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தி உள்ளது

 

Tags :

Share via