வேலை மோசடி.. ரூ.6.4 லட்சத்தை இழந்த நபர்

by Staff / 23-10-2023 12:48:10pm
வேலை மோசடி.. ரூ.6.4 லட்சத்தை இழந்த நபர்

சண்டிகரை சேர்ந்த நபர் ஒருவர் போலி வேலை வாய்ப்பை நம்பி ஒரே நேரத்தில் ரூ.6.40 லட்சத்தை இழந்துள்ளார். வேலை தேடி வரும் நவீன் குப்தா என்ற இளைஞரை சிலர் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி அழைத்துளளனர். அவரிடம் போனில் நேர்காணல் நடத்தி, போலியான அனுமதி கடிதம் அனுப்பியுள்ளனர். கட்டாய கல்வி, ஆவணச் சரிபார்ப்பு, தகவல் தொழில்நுட்பப் பயிற்சி என தவணை முறையில் ரூ.6.4 லட்சம் வசூலித்துள்ளனர்.. கடைசியில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நவீன் போலீசை அணுகி புகார் அளித்துள்ளார்.
 

 

Tags :

Share via