சசிகலா வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டமானது சட்ட விதிகளின் படி கூட்டப்படவில்லை என்றும், தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராக உள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின் படி கூடி, தீர்மானம் நிறைவேற்றியதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Tags :