குமரி -மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி கைது

by Staff / 09-08-2024 02:37:45pm
குமரி -மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி கைது

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திடல் பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபரான ராஜகோபாலிடம் கிராம நிர்வாக அதிகாரி வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 6 லட்சம் மோசடி செய்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த செலின் சரத்ராஜ் மற்றும் அவரது மனைவி மஞ்சு தம்பதியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர், ஊட்டியில் பதுங்கி இருந்த கணவன், மனைவியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via