திருநெல்வேலிக்கு  9 ஆம் தேதி சென்னையிலிருந்து கூடுதல் வந்தே பாரத் தீபாவளி சிறப்பு ரயில்.

by Editor / 07-11-2023 07:18:59pm
திருநெல்வேலிக்கு  9 ஆம் தேதி சென்னையிலிருந்து கூடுதல் வந்தே பாரத் தீபாவளி சிறப்பு ரயில்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலிக்கு கூடுதலாக ஒரு வந்தே பாரத்  ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. வழக்கமான வந்தே பாரத் ரயில் திருநெல்வேலியில் இருந்து பயணத்தை துவக்கி திருநெல்வேலியில் முடிக்கும் ஆனால் இந்த சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் பயணத்தை தொடங்கி சென்னை எழும்பூரில் பயணத்தை முடிக்கிறது. இதன்படி நவம்பர் 9 அன்று சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயில் (06068) மாலை 03.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த சிறப்பு ரயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்என தென்னக ரயில்வே  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : சென்னையிலிருந்து கூடுதல் வந்தே பாரத் தீபாவளி சிறப்பு ரயில்.

Share via