தீபாவளி பண்டிகையையொட்டி அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்.

by Editor / 12-11-2023 08:32:46pm
தீபாவளி பண்டிகையையொட்டி அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும்.

அண்ணாமலையார் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை தினமான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வெளிமாவட்டம், வெளி மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : தீபாவளி பண்டிகையையொட்டி அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

Share via