நடிகை நமிதாவின் கணவர் உள்பட இருவருக்கு காவல்துறையினர் சம்மன்

by Admin / 14-11-2023 09:32:07pm
நடிகை நமிதாவின் கணவர் உள்பட இருவருக்கு காவல்துறையினர் சம்மன்

  பண மோசடி  காரணமாக நடிகை நமீதாவின் கணவருக்கு சேலம் காவல் துறையினர் சம்மன் அனுப்பி உள்ளது. மத்திய அரசின் சிறு குறு தொழில் நிறுவனத்தின் பெயரை பயனபடுத்திமோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் காரணமாக நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி, பாரதிய ஜனதா கட்சி ஊடகப் பிரிவு மாநிலத்தலைவா் மஞ்சுநாத் ஆகியோருக்கு சேலம் காவல்துறை சம்மன்அனுப்பியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் எம். எஸ். எம். இ. ப்ரோமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் சார்பில் மத்திய அரசிடம் இருந்து சிறு சிறு தொழில் செய்ய கடன் பெற்று தருவதாக சேலத்தில் பிரபலமான ஒரு ஹோட்டலில் ஒரு கூட்டம் நடத்தி, அதன் மூலம் பணத்தை வசூல் செய்து மோசடி செய்ததாக புகார்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில், கோபால்சாமி என்பவர் தன்னிடம் பணம் மோசடி செய்ததாக சூரமங்கலம் காவல்துறையில் புகார் அளித்தார் .புகாரின் அடிப்படையில் துஷ்யம் யாதவ் ,முத்துராமன் ஆகிய இருவரின் மீதும் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் வழியாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இப் பிரச்சனையின் காரணமாக நமீதாவின் கணவருக்கும் தொடர்பு உள்ளதா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக நடிகை நமீதாவின் கணவருக்கும் பாரதிய ஜனதா கட்சி ஊடகப் பிரிவு தலைவர் மஞ்சுநாதனுக்கும் சேலம் மாநகர காவல் துறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது..

 

Tags :

Share via