டெல்டா மாவட்டங்களில் கனமழை-அமைச்சர்கள்,அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு.

by Admin / 14-11-2023 09:40:49pm
டெல்டா மாவட்டங்களில் கனமழை-அமைச்சர்கள்,அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு.

தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் டெல்டா பகுதிகளில் கனமழை அதிகரித்து கொட்டி வருவதால் அப்பகுதிகளுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று நிவாரணப் பணிகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கனமழையை சமாளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : டெல்டா மாவட்டங்களில் கனமழை-அமைச்சர்கள்,அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு.

Share via