அரசு பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவர் தற்கொலை

by Editor / 07-08-2022 01:27:24pm
அரசு பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவர் தற்கொலை

கிருஷ்ணகிரி அருகே பிளஸ் 2 மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர் அரசு விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. விசாரணையில் அவருக்கு பாதுகாப்பாக இருந்து வந்த அவரது தாத்தா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மரணமடைந்ததாகவும் அந்த மரண விரக்தியில் இதற்கு முன்பு மாணவன் இரண்டுமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டது தெரியவந்தது.

 

Tags :

Share via