ரூ. 20 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கியவர் கைது.

by Editor / 29-11-2023 09:13:16am
 ரூ. 20 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கியவர் கைது.

 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மூன்று பேரிடம் ரூ. 20 லட்சம் பெற்றுக் கொண்டு போலியாக நியமன ஆணை வழங்கியவரை போலீஸார்  கைது செய்தனர்.

கிருஷ்ணாபுரம் கொழும்பு செட்டியார் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் மகன் லட்சுமணன்(35). தீவிர திமுக பிரமுகரான இவர்  கிருஷ்ணாபுரத்தில் ஜெராக்ஸ் மற்றும் கணினி மூலம் ஜாப் ஒர்க் செய்து கொடுக்கும் கடை நடத்தி வருகிறார்.

இவர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன்  பாண்டியராஜன், மற்றும் பாலமுருகன் ஆகியோரிடம் தமிழக அரசு பணியில் வேலை பெற்று தருவதாக கூறி தலா ரூ. 8 லட்சம் வாங்கினாராம். அதேபோல் சண்முகநாதன் மகள் சித்ரா என்பவரிடம் ரூ. 4 லட்சம் வாங்கினாராம்.

ஆனால் மாதங்கள் பல கடந்தும் வேலை வாங்கி கொடுக்கவில்லையாம்.  இதை தொடர்ந்து பணம் கொடுத்தவர்கள் அவரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்களாம் .இந்நிலையில் பணம் கொடுத்த மூன்று பேருக்கும் பல்வேறு அரசு துறைகளில் வேலையில் சேருவதற்கான பணி நியமன ஆணையை லட்சுமணன் கொடுத்தாராம். 

ஆனால் அவ்வாறு கொடுக்கப்பட்ட ஆணைகள் போலியானது என்பது அவர்கள் வேலைக்கு சேர சென்ற இடங்களில் தெரிய வந்ததாம்.இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜா வழக்கு பதிந்து லட்சுமணனை கைது செய்தார். மேலும் வேறு பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதா? என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :  ரூ. 20 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கியவர் கைது.

Share via