வீச்அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரேஸ் பைக்கில் கஞ்சா வாங்க வந்த வாலிபர் சுற்றி வளைப்பு.

by Admin / 01-01-2024 02:35:39pm
வீச்அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரேஸ் பைக்கில் கஞ்சா வாங்க வந்த வாலிபர் சுற்றி வளைப்பு.

வீச்அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரேஸ் பைக்கில் கஞ்சா வாங்க வந்த வாலிபர் பொதுமக்களால் சுற்றி வளைப்பு..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சப் டிவிஷனில் போலீஸ் அதிகாரிகளின் 24 மணி நேரமும் கஞ்சா, குட்கா, புகையிலை ஹான்ட்ஸ், பான்பராக், துளிப்  போன்ற போதைப் பொருட்கள் விற்பனையும் டாஸ்மாக் சரக்குகளின் விற்பனையும் எல்லா விதமான சமூக விரோத செயல்களும் படுஜோராக பெட்டிக்கடை டீக்கடை வடைக்கடை பூக்கடை  மொபைல் ரீசார்ஜ் கடை என திரும்பிய திசை எல்லாம் கிளைகள் பரப்பி பான் மசாலா குட்கா புகையிலை பொருட்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி - சாத்தூர் ரோட்டில் அமைந்துள்ள இலுப்பையூரணி சுரங்கப் பாலம் அருகே கஞ்சா வியாபாரியை வீச்சரிவாள் மற்றும் பட்டாக்கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து கஞ்சாவை பரித்துச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது கஞ்சா வாங்க வந்தவரின் ரேஸ் பைக்கில் இந்த ஹெல்மெட்டை எடுத்து கஞ்சா வியாபாரி அவர்களை தாக்கியுள்ளார் இதில் அவர்கள் நிலை குழைந்து போகவே கஞ்சா வியாபாரி கூக்குரலிட்டு தன்னை காப்பாற்றுமாறு சத்தமிட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதை பார்த்த வாங்க வந்தவர்கள் தப்பியோடியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் கஞ்சா வியாபாரியும் தப்பியுள்ளார். இதில் ரேஸ் பைக்கில் தப்ப முயன்ற ஒருவரை மட்டும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கி அவர்களிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் நரி நாகராஜ்  என்பதும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.அவரது பைக்கையும்  பெரிய வீச்சரிவாளையும் கைப்பற்றி போலீசார் நரி நாகராஜாவை கிழக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

வீச்அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரேஸ் பைக்கில் கஞ்சா வாங்க வந்த வாலிபர் சுற்றி வளைப்பு.
 

Tags :

Share via