திமுக அமைச்சர்களின் சொத்துகுவிப்பு வழக்குகள் ரத்து

திமுக 1996-2001 ஆண்டுகளில் ஆட்சியின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, குழந்தைவேலு ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக அடுத்து வந்த அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. 2015ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு முறையீடு செய்தது. அதிமுக அரசு செய்த முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து இன்று (நவம்பர் 29) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவாய், நரசிம்மா அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Tags :