தில்லுமுல்லு பண்ணும் ஜிஆர்டி.. தங்க நகையில் கண்ணாடி கல்லை வைத்து பித்தலாட்டம்..

by Admin / 30-07-2021 02:08:01pm
தில்லுமுல்லு பண்ணும் ஜிஆர்டி.. தங்க நகையில் கண்ணாடி கல்லை வைத்து பித்தலாட்டம்..


.
சென்னையின் பிரபல நகைக்கடையான ஜி ஆர் டி நகை கடையில் வாங்கிய நகையில் கண்ணாடி துகள்கள் இருப்பதாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி வயது 35 என்பவர் 2015 ஆம் ஆண்டு சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் அமைந்துள்ள பிரபல நகைக் கடையான ஜி
 
ஆர்டி நகை கடையில் நகை சீட்டு கட்டி 40.74 கிராம் எடையுள்ள தங்க நெக்லஸ் ரூபாய் 1,15,704/- கொடுத்து வாங்கியதாகவும் கடந்த வாரம் நகை அறுந்து விட்டதால் பெங்களூர் ஜி.
 
ஆர்.டி நகை கடைக்கு சென்று பழைய நகையை கொடுத்துவிட்டு புது நகை வாங்க பழைய நகையை பரிசோதனை செய்தபோது நகையின் உருண்டை பாகங்களில் உள்ளே கண்ணாடி துகள்கள் இருந்ததாகவும் அதுபற்றி பெங்களூர் ஜி.
 
ஆர்.டி மேலாளரை கேட்டபோது எதுவாக இருந்தாலும் தி.நகர் கடைக்கு சென்று விசாரித்து கொள்ளுங்கள் என அலட்சியமாக‌ கூறியதால், தி நகர் நகை கடை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை வேண்டி தி நகர் துணை ஆணையாளரிடம் கொடுத்த புகாருக்கு புகாரின் அடிப்படையில் சிஎஸ்ஆர் போடப்பட்டு பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via