பாஜகவுக்கு முடிவுக்காலம் நெருங்கிவிட்டது எம்.பி, மஹூவா மொய்த்ரா
விசாரணையை முழுமையாக நடத்தாமல் தன் மீது நடவடிக்கை எடுத்த பாஜகவுக்கு முடிவுக்காலம் நெருங்கிவிட்டதாக எம்.பி, மஹூவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். லோக்சபாவில் கேள்விகள் கேட்பதற்கு பணம் வாங்கிய குற்றச்சாட்டில் மஹூவா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில், இதுகுறித்து, பேசிய மஹூவா, பெண்கள், சிறுபான்மையினர் என அனைவரது உரிமைகளையும் மத்திய அரசு பறிக்கிறது. தொடர்ந்து அடக்குமுறையை மேற்கொண்டு வரும் பாஜக அரசின் முடிவுக்காலம் நெருங்கிவிட்டது என ஆவேசமாக பேசிய அவர் எச்சரித்துள்ளார்.
Tags :