ஜார்கண்ட் முதல்வருக்கு 6வது முறையாக சம்மன்
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது, நிலம் கொள்முதல் பரிவர்த்தனையில் பணமோசடி செய்ததாக அமலாக்க இயக்குனரகம் (ED) வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து ஆறாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. செவ்வாய்க்கிழமை சோரன், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ராஞ்சியில் உள்ள மண்டல அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :