ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலி

by Staff / 11-12-2023 11:35:41am
ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலி

கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள ரிசார்ட்டில் கேரளாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று இறந்து கிடந்தது. கொல்லத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வினோத் பாபுசேனன் (43), அவரது மனைவி கல்லூரி பேராசிரியை ஜிபி ஆபிரகாம் (37), மகள் ஜேன் மரியா ஜேக்கப் (11) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். நிதி பிரச்சனையே தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது. வினோத்தும் ஜிபியும் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். குழந்தை படுக்கையில் இறந்து கிடந்தது. குழந்தையை கொன்றுவிட்டு இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் முடிவு செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும் என, மடிக்கேரி போலீசார் தெரிவித்தனர். வினோத்தும், ஜிபியும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via