மின் கட்டணம் ஒருமாதம் அவகாசம் அளிக்க வேண்டும் ஓபிஎஸ் கோரிக்கை

by Staff / 06-12-2023 12:41:19pm
மின் கட்டணம் ஒருமாதம் அவகாசம் அளிக்க வேண்டும் ஓபிஎஸ் கோரிக்கை

மின்கட்டணம் செலுத்துவதற்கு ஒரு மாதம் அவகாசம் நீடிக்க வேண்டுமென முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து கூறிய ஒபிஎஸ், மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அவகாசம் வழங்க வேண்டும் என் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via