காதலை கைவிட மறுத்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி
திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த ஆசீர் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் தங்கத்தாய் (21). மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. காதலை கைவிடும் படி குடும்பத்தினர் வலியுறுத்தினர். அதைக் கேட்காத ஆத்திரத்தில் தங்கத்தாயை அவரது சகோதரரான 17 வயது சிறுவன் நேற்று இரவு சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தம்பி, உடன் பிறந்த அக்காவை வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :