அதிவேக ரயில் சோதனை- ரயில்வே துறை எச்சரிக்கை
மதுரை - தூத்துக்குடி இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திலிருந்து மேலமருதூர் வரை 17 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் பாதையை பெங்களூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் மார்ச் 5 ஆம் தேதியன்று ஆய்வு செய்கிறார். பாதுகாப்பு ஆணையர் அன்று காலை 11.30 மணி மு தல் மாலை 04.30 மணி வரை சிறப்பு ரயில் மூலம் அதிவேக சோதனை ஓட்டம் நடத்த இருக்கிறார். எனவே பொதுமக்களும், புதிய ரயில் பாதை அருகே வசிப்போரும் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறும் போது ரயில் பாதையை கடக்கவோ, நெருங்கவோ வேண்டாம் என ரயில்வே துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags : High Speed Train Test- Railway Department Warning