மனைவி, குழந்தையை கொன்றுவிட்டு காவலர் தற்கொலை

by Staff / 15-12-2023 04:08:49pm
மனைவி, குழந்தையை கொன்றுவிட்டு காவலர் தற்கொலை

தெலுங்கானா, சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட பாதுகாப்பு காவலர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
காவலர் நரேஷ், தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். இந்த சம்பவம் காலை 11.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.கொலை மற்றும் தற்கொலைக்கான காரணங்களை காவல்துறையினர் விசாரித்துவரும் நிலையில் காவலர் நரேஷ் கடன் தொல்லைகளால் அவதிப்பட்டுவந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த முடிவுக்கு கடன்தொல்லை காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via