சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி நினைவூட்டல் கடிதம்

அ.தி.மு.க. கட்சித் தலைமைப் பதவி குறித்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை மாற்றக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதங்களை ஆய்வு செய்து வருவதாக சபாநாயகர் கூறியிருக்கிறார். இந்த நிலையில் 17-ந் தேதி சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குகிறது. எனவே தனது கடிதங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளார்.
Tags :